25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


கதர் மற்றும் கிராமப் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை குறித்து, தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரிய தலைமை செயல் அலுவலர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கதர் மற்றும் கிராமப் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை குறித்து, தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரிய தலைமை செயல் அலுவலர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (08.01.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S,. அவர்கள் முன்னிலையில், தமிழ்நாடு கிராம தொழில் வாரியம் தலைமைச் செயல் அலுவலர் திரு.வ.சம்பத்,I A S., அவர்கள்  தலைமையில் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தால் உற்பத்தி செய்யப்படும் கதர் மற்றும் கிராம பொருள்கள் விற்பனையை மேம்படுத்துவது தொடர்பாக அனைத்துத்துறை அலுவலருடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கதர் வாரியத்தில் உற்பத்தி செய்யப்படும் கதர் மற்றும் கிராமப் பொருட்கள் மற்றும் பனை சார்ந்த பொருட்கள் விற்பனையை மேம்படுத்த ஒத்துழைப்பு வழங்குவது குறித்து அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்களுக்கு வலியுறுத்தப்பட்டது.

மேலும் பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்குவது தொடர்பாக மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் உள்ளிட்ட அலுவலருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.முன்னதாக திருவில்லிபுத்தூர் மாரியம்மன் எண்ணெய் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம், எழுது பொருள் மற்றும் அச்சு தொழிற் கூட்டுறவு சங்கம் ஆகியவற்றை தமிழ்நாடு கிராம தொழில் வாரியம் தலைமைச் செயல் அலுவலர்  அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆனந்தி, மண்டல துணை இயக்குநர்(கதர் கிராமத் தொழில்கள்) திருமதி சே.பாரதி, உதவி இயக்குநர்(மதுரை, கதர் கிராம தொழில்கள்) திரு.எபனேசர் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News