மேற்கு தொடர்ச்சி மலையில் வறட்சி: தண்ணீருக்காக தவிக்கும் வனவிலங்குகள்.
ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், காட்டுமாடு, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளின் முக்கிய வாழ்விடமாக திகழ்கிறது. அரிய வகை பட்டாம்பூச்சிகளும் இப்பகுதியில் அதிகளவில் காணப்படுகின்றன.
தற்போது மாவட்டத்தில் கோடை வெயில் தீவிரமடைந்து, மழையின்மை நீடிப்பதால் மலைப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது. இயற்கை நீரோடைகள் மற்றும் குட்டைகள் வறண்டு போனதால், குடிநீர் மற்றும் உணவு தேடி வனவிலங்குகள் அடிவார விவசாய நிலங்கள் மற்றும் தோப்புகளுக்குள் அடிக்கடி நுழைந்து வருகின்றன.
இந்த சூழலை பயன்படுத்தி சில வேட்டையாடுபவர்கள் கண்ணி மற்றும் நாட்டு வெடிகுண்டுகளை வைத்து வனவிலங்குகளை வேட்டையாட முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் விலங்குகள் வாகன விபத்துகள் மற்றும் மின்வேலிகளில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.
எனவே, வனப்பகுதிகளில் உள்ள இயற்கை குட்டைகள் மற்றும் செயற்கை நீர்த் தொட்டிகளில் லாரிகள் மூலம் தண்ணீர் நிரப்புதல், வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வன உயிரின பாதுகாப்பு ஆர்வலர்கள் எதிர் பார்க்கின்றனர்.
0
Leave a Reply