தாமஸ் கோப்பை பேட்மிண்டன், இந்தியா அரை இறுதியில் தோல்வி . வெண்கலப்பதக்கம் பெற்றது.
டென்மார்க்கின் ஹோர்சென்ஸ் நகரில், இந்தியா ஆண்களுக்கான தாமஸ் கோப்பை மற்றும் பெண்களுக்கான உபேர் கோப்பை பேட்மிண்டன் போட்டி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு நடந்த அரைஇறுதியில் ,தாமஸ் கோப்பை போட்டியில், இந்திய அணி, பிரான்சை எதிர்கொண்டது. காயம் காரணமாக லக்ஷயா சென் ஆடவில்லை. மற்ற இந்திய வீரர்களான ஆயுஷ் ஷெட்டி, ஸ்ரீகாந்த், பிரனாய் ஆகியோர் தங்களது ஆட்டங்களில் நேர் செட்டில் தோல்வி அடைந்தனர். முடிவில் பிரான்ஸ் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று முதல் முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. தோல்வி அடைந்த இந்தியா வெண்கலப்ப தக்கத்துடன் திருப்தி கண்டது. இந்த போட்டியில் இந்தியா பதக்கம் வெல்வது இது 5-வது முறையாகும்.
0
Leave a Reply