25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சொக்கர் கோயிலில்  மாசி மக பிரம்மோற்ஸவ தேர்த் திருவிழா >> ராஜபாளையம் சொக்கர் கோயிலில் தெப்பத் திருவிழா >> இராஜபாளையம் ரோட்டரி சங்கமும், நாற்று அமைப்பும் இணைந்து மகளீர் தின விழா கொண்டாட்டம் >> ராஜபாளையம் சொக்கர் கோயிலில்மாசி மகம் பிரம்மோற்ஸவத்தில் மீனாட்சி, சொக்கர் திருக்கல்யாணம் . . >> ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கே மேற்கு தொடர்ச்சி மலை, மேக மலை புலிகள் காப்பகத்தில்எண்ணிக்கை அதிகரித்துள்ள சாம்பல் நிற அணில்கள் >> ராஜபாளையம் முடங்கியார் ரோடு, செண்பகத்தோப்பு ரோட்டில் செக்போஸ்ட் திறப்பு.  >> மேற்கு தொடர்ச்சி மலையில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் மலையேற்றம் செல்வதை ஏப்ரல் 15 வரை நிறுத்தி வைக்க அரசு அறிவுறுத்தி உள்ளன.   >> மும்பையில் நடைபெற்றதேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் சாதனை >> அரசு பஸ்களில் ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகத்தின்செண்பகத் தோப்பில் உள்ள சாம்பல் நிற அணில்கள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த அதன் ஓவியங்கள்வரையப்பட்டுள்ளது >> இந்திய சமத்துவ நாயகன் R.சங்கர் கணேஷ் 21-ம் ஆண்டு தொடர் சேவையாளர். >>


சருமத்தை ஜொலிக்க செய்யும் வெள்ளரிக்காய்  டோனர் 
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சருமத்தை ஜொலிக்க செய்யும் வெள்ளரிக்காய் டோனர் 

சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க டோனர் பயன்படுத்த வேண்டும். வெள்ளரிக்காய் உதவியுடன் வீட்டிலேயே எளிதாக டோனர் தயாரிக்கலாம்.

வெள்ளரிக்காய்  டோனர் தயார் செய்வது :-முதலில் வெள்ளரிக்காயின் தோலை நீக்கி அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.பின்பு வெள்ளரிக்காய் துண்டுகளுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் குறைந்த தீயில் வைத்து 5-7 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். 

இந்த கலவையை ஆற வைத்து மிக்ஸியில் மைய அரைத்து எடுத்து கொள்ளவும். 

பின்பு இதை வடிக்கட்டி சாறை மட்டும் தனியாக எடுக்கவும். இந்த சாறை பாட்டிலில் ஊற்றி வைத்து டோனராக பயன்படுத்தலாம். 

தேவைப்பட்டால் இதில் ரோஸ் வாட்டர் மற்றும் விட்ச் ஹசல் சாறையும் சேர்த்து பயன்படுத்தலாம். முகத்திற்கு பல நன்மைகளை வழங்கும் வெள்ளரிக்காய் டோனர் தயார். 

எப்படி பயன்படுத்துவது- முதலில் முகத்தை நன்றாக சுத்தம் செய்யவும். இப்போது வெள்ளரிக்காயில் செய்யப்பட்ட இந்த டோனரை முகத்தில் தடவவும். இதை பயன்படுத்தினால் சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும்.

குறிப்பு: வெள்ளரிக்காயில் செய்யப்பட்ட இந்த டோனரை 2-3 நாட்களுக்கு மேல் பயன்படுத்த கூடாது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News