AI மீது நிறுவனங்களுக்கே கட்டுப்பாடு வேண்டும்: ஸ்ரீதர் வேம்பு.
ஜோஹோ தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு, நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் வெளி நிறுவனங்களை அதிகம் சாராமல், தங்களது AI உள்கட்டமைப்பு மற்றும் தரவின் கட்டுப்பாட்டை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். AI சேவைகளை முழுமையாக சார்ந்தால், நிறுவனங்களின் நீண்டகால மதிப்பு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கே சென்றுவிடும் என்றும், திறந்த மூல (Open Source) AI மற்றும் சொந்த உள்கட்டமைப்பை பயன்படுத்துவது எதிர்கால வளர்ச்சிக்கு முக்கியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply