பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் முதன்முறையாக சாம்பியன்.
பாரீசில் நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இறுதி ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள அலெக்சாண்டர் ஸ்வெரேவ், இத்தாலியின் பிளவியா கோபோலியை (14-ம் நிலை வீரர்) எதிர்கொண்டார். இருவரும் தலா 2 செட்களைக் கைப்பற்றியதால் ஆட்டம் 5-வது செட் வரை நீடித்தது.
சுமார் 4 மணி 16 நிமிடங்கள் விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தின் முடிவில், ஸ்வெரேவ் 6-1, 4-6, 6-4, 6-7 (5-7), 6-1 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்றார்.
2015 முதல் விளையாடி வரும் 29 வயதான அலெக்சாண்டர் ஸ்வெரேவ் கைப்பற்றும் முதலாவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும்.சாம்பியன் பட்டம் வென்ற ஸ்வெரேவுக்கு ரூ. 31 கோடியும்,இரண்டாம் இடம் பிடித்த கோபோலிக்கு ரூ. 15.5 கோடியும் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.
0
Leave a Reply