இந்திய வீராங்கனை கிருஷ்ணா ஜெயசங்கர்மேனன் உள்ளரங்கு தடகளத்தின் குண்டு எறிதலில் வெள்ளி வென்றார்.
'மவுன்டைன் வெஸ்ட்' சர்வதேச உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவில், பெண்களுக்கான குண்டு எறிதலில் இந்தியாவின் கிருஷ்ணா ஜெயசங்கர் மேனன் பங்கேற்றார்.
முதல் வாய்ப்பில் 16.30 மீ., எறிந்த கிருஷ்ணா, அடுத்த இரு வாய்ப்பு களை வீணடித்தார். மூன்றாவது, 4வது வாய்ப் புகளில் முறையே 16.27, 16.64 மீ., எறிந்த இவர், கடைசி வாய்ப்பில் அதிக பட்சமாக 17.09 5., எறிந்தார். ஒட்டுமொத்த மாக 2வது இடம் பிடித்த கிருஷ்ணா, வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.
சொந்த தேசிய சாதனையை முறியடித்த கிருஷ்ணா தமிழகத்தை சேர்ந்தவர். அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் கடந்த மாதம் நடந்த போட்டி யில் 16.83 மீ., எறிந்து,வெண்கலப் பதக்கத்துடன் தேசிய சாதனை படைத்திருந்தார்.
தங்கப்பதக்கத்தை அமெரிக்க வீராங்கனை மகாய்லா லாங் (17.69 மீ.,) வென்றார். எரின் பிரவுன் (15.34 மீ.,) மற்றொரு அமெரிக்க வீராங்கனை வெண்கலம் கைப்பற்றினார்.
0
Leave a Reply