பன்னீர் புதினா புலவு
தேவையான பொருட்கள்-1டம்ளர் சீரகசம்பா அரிசி,1 பாக்கெட் பன்னீர்,1 கப் பச்சை பட்டாணி,1பெரிய வெங்காயம்,1 கப் புதினா இலை,1 பச்சை மிளகாய்,1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது,1ஸ்பூன் தனி மிளகாய் தூள்,1ஸ்பூன் தனியா தூள், 1சிறியஸ்பூன் கரம் மசாலாத்தூள்,1 துண்டு பட்டை, 2 கிராம்பு,1 பிரிஞ்சி இலை, 4 ஸ்பூன் நெய், 2ஸ்பூன் ஆயில்
செய்முறை - சீரக சம்பா அரிசியை இருமுறை கழுவி தேவையான நீர் விட்டு10 நிமிடம் ஊறவிடவும். ஒரு பெரிய வெங்காயம் ஒரு பச்சை மிளகாய்நீளவாக்கில் நறுக்கவும். பனீரை சதுர வடிவ துண்டுகளாக நறுக்கவும்.இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன் எடுத்து வைக்கவும். பச்சை பட்டாணி ஒரு கப் எடுத்து வைக்கவும்.
குக்கரில் நெய் விட்டு காய்ந்ததும் பட்டை கிராம்பு பிரிஞ்சி இலை ஏலக்காய் தாளிக்கவும். வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும். பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கி ஒரு கப் புதினா தழை சேர்த்து வதக்கவும்.
நறுக்கிய பனீர் சேர்த்து தேவையான உப்பு மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் தனியாத்தூள்சேர்த்து கலந்து விடவும்.தேவையான நீர் விட்டு ஊற வைத்த சீரக சம்பா அரிசியை சேர்த்துக் கலந்து குக்கரை மூடி போட்டு சிம்மில் வைத்து இரண்டு விசில் விடவும்.சுவையான பன்னீர் புதினா புலவு தயார் .
0
Leave a Reply