25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


முளைகட்டிய பயறு அடை
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

முளைகட்டிய பயறு அடை

தேவையான பொருட்கள்- 

அடை மாவு செய்ய 

2 கப் முளைகட்டிய பயறு வகைகள் ,

1 கப் இட்லி அரிசி,

1கப்பச்சரிசி,

3/4 கப் உளுந்து,

சிறிதுகறிவேப்பிலை,

4 வரமிளகாய்,

10 பல் பூண்டு,

2 ஸ்பூன் சீரகம்,

1 ஸ்பூன் சோம்பு,

2 துண்டு இஞ்சி,

1 மூடி தேங்காய் துருவல்,

தேவையான அளவுகல் உப்பு.

அடை வார்க்க:

4 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கவும். 

2 பச்சை மிளகாய்,சிறிது கொத்தமல்லி தழை,

2 கேரட் துருவியது, சிறிது எண்ணெய்.

செய்முறை  - 

பச்சை பயறு,வெள்ளை தட்டபயறு,சிகப்பு தட்டப்பயறு, கொள்ளு,கருப்பு சுண்டல், மொச்சை பருப்பு, சிவப்பு ராஜ்மா ஆகியவற்றை ஒரே அளவாக எடுத்து எட்டு மணி நேரம் வரை ஊறவிடவும் .பின் கழுவி தண்ணீரை வடிகட்டி சுத்தமான மஸ்லின் துணியில் கட்டி வெயில் படுமாறு வைக்கவும். 12 மணி நேரம் கழித்து பார்த்தால் முளைத்து இருக்கும். இதை பிரிட்ஜில் ஸ்டோர் செய்து கொள்ளவும். அரிசி உளுந்து ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மூன்று மணி நேரம் வரை ஊறவிடவும் .பின் கழுவி கூட முளைகட்டிய பயறு வகைகள் சேர்த்து கிரைண்டரில் போட்டு அரைக்கவும்.

அடை மாவு பாதி அரைப் பட்டதும் ,சோம்பு, சீரகம் ,வரமிளகாய், கறிவேப்பிலை ,பூண்டு ,இஞ்சி சேர்த்து(தேங்காய் தவிர) அரைக்கவும். பின் ஓரளவிற்கு நைசானதும் தேங்காய் துருவல் சேர்த்து கல் உப்பு சேர்த்து ஒரு முறை அரைத்து எடுக்கவும் .பின் வெங்காயம் பச்சை மிளகாயை துருவிய கேரட் ஐ சிறிது எண்ணெய் விட்டு வதக்கி இதனுடன் சேர்த்து கொள்ளவும்.

இந்த மாவை அரை மணி நேரம் வரை ஊறவிடவும். பின் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து சூடான தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு மாவை ஊற்றவும் .மிகவும் லேசாக தேய்க்க கூடாது. மெல்லிய தீயில் வைத்து இரண்டு புறமும் எண்ணெய் விட்டு நன்றாக வேகவைத்து எடுக்கவும். சுவையான ஆரோக்கியமான முளைகட்டிய பயறு அடை ரெடி.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News